பெண்(வன்) கொடுமை!

பெண்(வன்) கொடுமை!

ஐந்து வயது பெண் சிசுவிற்கு நடந்த
பாலியல் கொடுமைகள் பற்றி
தாய் படிப்பதைக்கேட்ட கருவில் உள்ள
பெண் சிசுவிற்கும் கண்களில் கண்ணீர்!

தன் மகளையே தன் இச்சைக்கு அடிமையாக்கி
நீண்டநாளாய் அடைத்துவைத்து கற்பழித்த தந்தை!

உடன் பிறந்தவளானாலும் பெண்தானே என்று
காமக்கணைதொடுக்கும் அண்ணன்!

படிக்கும் அறை எதுவெனக்கேட்டால்
படுக்கும் அறையை காட்டும் பள்ளி ஆசிரயர்!

உடல் நோய் தீர்க்க சென்றவளை ஸ
மனநோயாளியாக்கிய மருத்துவர்!

உதவி நாடிச்சென்றவளிடம் கைமாறாய்
உடலை கேட்கும் நண்பண்!

பாதை தெரியாமல் தத்தளிக்கும்
பேதைகளின் வாழ்வை சிதைக்கும்
போதை சாமியார்கள்!

காவல் கேட்டு சென்றால்
லஞ்சமாய் மஞ்சம் கேட்கும் காவல்துறை!


அமைதியைத்  தேடி ஆசிரமம் சென்றால்
கள்ளை உண்டு களியாட்டம் போடும் காமுகர்கள்!

எத்தனை திறமைகள் இருந்தும் என்pன
விழிப்புணர்வு இல்லையே!-தான்
என்ற திமிர்கொண்ட பெண்களிடம்!


வழக்கறிஞர்
ராசா துரியன்

என் அம்மா எழுதிய வரிகள்


Comments