அதிபரைக் கொல்ல முயன்ற கதை

அதிபரைக் கொல்ல முயன்ற பிக்பாக்கெட்!


"அதிபரைக் கொலை செய்ய முயன்றன வழக்கிலிருந்து அரசன் உட்பட அனைவரும் விடுதலை!"

காலையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் ஊடகங்களிலும் ஒருமித்த குரலில் அலறின!

வழக்கம்போல இதிலும் வாதங்களும் எதிர் வாதங்களும் வரிசை கட்டி வர, “இனாஃப் ஆஃப் திஸ் ட்ராஷ்”  என்று முனகியவாறு சர்க்கரை இல்லாத கடுங்காப்பியை ஒரு கோப்பையில் எடுத்துக்கொண்டு காற்றாட பால்கனியில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்!

ஏனோ அன்று வேலையில் மனம் ஒட்டவில்லை!

கடும் கசப்பும் சூடுமாய் காஃபி தொண்டைக்குள் இறங்க, ரவியின் மனதில் காட்சிகள் விரிய ஆரம்பித்தன!



அது ஒரு வினோதமான நாடு!

முன்னூறு ஆண்டுகள் வெள்ளைக்காரனுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த தேசம், தன்னை உய்வித்த மஹானையே களபலி கொடுத்துவிட்டு இன்று கொள்ளைக்காரர்களுக்கு விரும்பியே அடிமைப்பட்டுக் கிடக்கிறது!

கொள்ளையடிப்பதும் திருடுவதும்வாழ்க்கை முறை என்று எப்போதோஉளமார ஒத்துக்கொண்ட மக்கள் வாழும்தேசம்!

தங்களுக்குள் மொழி, இனம், மதம் சாதி, நிறம் என்று கிடைத்தகாரணங்களையெல்லாம் வைத்துமோதிக்கொண்டு, பழம்பெருமை பேசிசிறுகச் சிறுகச் செத்துவரும் இனம்!

அங்கு ஆட்சி முறை என்பது ஒருவினோதமான அமைப்பு!

ஆங்காங்கு மாநிலங்களில் சிறுசிறுபிக்பாக்கெட் திருடர்கள்ஆண்டுகொண்டிருக்க, மத்தியில்அவர்களை ஆட்டுவிக்கும் ஒருதலைமைக் கொள்ளை கும்பல்!

இவை அனைத்தையும் ஐந்தாண்டுக்குஒருமுறை ஒரு திருவிழாவில்தேர்ந்தெடுத்து, அந்தத் திருடர்கள்கையில் தங்கள் வீட்டு சாவியைமகிழ்வாய்க் கொடுத்துவிட்டுதங்களுக்குள் அடிதடியைத் தொடரும்ஆட்டுமந்தைக் கூட்டம்!



இந்தக் கூட்டத்திலும் ஒட்டாது ஒரு கூட்டம்அந்த தேசத்தின் தென்கோடி முனையில்!

அங்கிருப்பவர்களுக்கு ஒருவினோதமான மனநிலை!

அடுக்கு மொழியும், அழகாய்இருப்பதும்தான் ஆள்வோரின் லட்சணம்என்று தங்களுக்குள் முடிவுசெய்துகொண்டு, அண்டைமாநிலங்களோடோ, மொத்தமாய் ஆளும்மத்தியக் குழுவோடோ, எந்தக்காலத்திலும் ஒரு இணக்கம் பேணாதகூட்டம்!

நாளடைவில், சிகப்பாய் இருப்பவன்பொய் சொல்லமாட்டான் என்ற வினோதநம்பிக்கையில், தனக்கானஆண்டைகளை அரிதாரம் பூசும்கூட்டத்துக்குள் தேட ஆரம்பித்தது!

அவர்களும் கிடைத்த வாய்ப்பைஉறுதியாகப் பற்றிக்கொண்டு ஒருநாள்சாராயக்காசை பிச்சையாக எறிந்துஆளும் உரிமையை சுலபமாய்அபகரித்துக்கொண்டார்கள்!

இப்படியே வாழ்க்கைச் சக்கரம்சுழன்றுகொண்டிருந்தது!

மத்தியில் ஒரு கொள்ளைக்கூட்டம்நிரந்தரமாகப் பாய்விரித்துப்படுத்திருந்தது!
அதன் தலைமை மட்டும் ஒற்றைக்குடும்பத்தின் கையில் ஐந்துதலைமுறையாக பாதுகாப்பாய் இருந்தது!

எதிர்த்து நின்ற மற்றொருகொள்ளைக்கூட்டம் அவ்வப்போதுதலைமையைக் கைப்பற்றினாலும், அதுஒரு தற்காலிக நிலையாகவே இருந்தது!

காலம் எப்போதும் ஒரேபருவநிலையோடு இருப்பதில்லையே?

அண்டைநாட்டு விவகாரத்தில் ஒருதவறான நிலைப்பாட்டை எடுத்த ஆளும்கூட்டத் தலைவன் கொல்லப்பட, வாரிசுஉரிமை அடிப்படையில் அவரது மனைவிதலைமை ஏற்க, ஒரு சட்டச் சிக்கல்வந்ததில், ஒரு மௌன சாமியார்கைப்பாவை அதிபரானார்!

அதே நேரத்தில், அதன் எதிரியானகூட்டத்தில், ஒரு இளம் அமாவாசைத்தலைவன் மெல்லமெல்ல நாகராஜசோழன் ஆகிக்கொண்டிருந்தான்!

அவனைப் பொறுத்தவரை, வெல்வதற்குஎவரையும் கொல்லலாம், எந்தப்பாதகத்தையும் செய்யலாம்!

அவனது ராஜகுரு அடிக்கடிசொல்வதுண்டு,

" எவ்வளவு கேவலமான வழிமுறையும்வெற்றிக்குப்பின் மறக்கப்படும்! வெற்றிதான் முக்கியம்!!"

அது அவருக்கே தீங்கானது அடுத்த கதை!

இந்தக் கொள்ளைக்கூட்டங்களையும்அச்சுறுத்த ஒரு தன்னாட்சி அமைப்புஇருந்தது!

அதை எப்படியோ கைப்பற்றினான்நாகராஜசோழன்!

ஒரு அதிகாலையில் அந்தத் தன்னாட்சிஅமைப்பின் வழிகாட்டுதலில் அனைத்துஊடகங்களும் ஒன்றுபோல் அலறின!

“அடுத்து அதிபராகப்போகும்நாகராஜசோழனைக் கொல்ல சதி!

மத்தியில் ஆளும் கூட்டத்தின்ஆதரவோடு தென்கோடிமுனைக்கூட்டத்தின் திட்டம்!”

துரதிர்ஷ்டவசமாக,அந்த தென்கோடிக் கூட்டத்தின்தலைவருக்கு மக்கள் மத்தியில் ஒருதீராத அவப்பெயர்!

‘தேனை எடுத்தேன், புறங்கையைநக்குவதை தவிர்க்க முடியவில்லை!’ என்ற அவரது வசனமும்,

எதிர்த்து நின்ற கூட்டத் தலைமையின்வசீகரமும்

அவரை மக்களின் ஒரு சாரார் மனதில்எதிரியாய் உருவகித்து வைத்துவிட்டது - நிரந்தரமாய்!

இத்தனைக்கும், தேனை எடுக்கஆரம்பித்த எதிர் அணி தலைமையும்,அதை ஆட்டிவைத்த கூட்டமும்மொத்தத் தேனையும்பிடுங்கிக்கொண்டதோடு, வீடுபுகுந்தும் திருட ஆரம்பித்தார்கள்!

ஏனோ, அழகில் மயங்கிக்கிடந்தமக்கள் கூட்டம், தானாகவேஉடைமைகளை எடுத்து அவர்கள்காலடியில் வைத்துவிட்டு ஐநூறுரூபாய் நோட்டுக்களை இனாமாகப்பெற்றுக்கொண்டது!

அதன்பின் காட்சிகள் விறுவிறுப்பாகஅரங்கேற ஆரம்பித்தன!

வருங்கால அதிபரைக் கொல்லமுயன்றதாக, அரசன் என்ற தென்கோடிப்பிரதிநிதியும், சகாக்களும் கைதுசெய்யப்பட்டார்கள்!



அரிதாரக் கூட்டமும்,நாகராஜசோழனும், மாநிலத்திலும்மத்தியிலும் இதைச் சொல்லியேஅடுத்த ஐந்தாண்டுத் திருவிழாவில்அதிபர் ஆனார்கள்!

வசீகரமாய்ப் பேசியே அதிபரானநாகராஜசோழனை தன்னாட்சிஅமைப்பின் தலைவர் சந்தித்தார்!

"நீதிமன்றம் அவசரப்படுகிறது!

குற்றத்தை நிரூபிக்கச் சொல்லிநெருக்கடி கொடுக்கிறது! என்ன செய்ய?"

“வழக்கை நடத்து!”

“எப்படி அதிபரே?”

“சுலபம்! அவர்கள் மீதான குற்றச்சாட்டுஎன்ன?”

“உங்களைக் கொலை செய்யத்திட்டமிட்டது!”

“அதைச் சொல்லியே வழக்கை நடத்து!”

“நீதிமன்றம் ஆதாரம் கேட்கிறது அதிபரே!”

“இப்படிச் சொல்லுங்கள்!

அரசன் வழக்கமாய் பிக்பாக்கெட்அடித்த தொகையில் ஒரு கத்தி வாங்கதிட்டமிட்டார்!

அந்தக் கத்தியை வைத்து சிலகொலைகளைச் செய்து பணம்பறிக்கவும்,

அந்தப் பணத்தை வைத்துவெடிகுண்டுகள் வாங்கவும்,

அந்த வெடிகுண்டு வீசி பீரங்கிகளைக்கைப்பற்றவும்,

அந்த பீரங்கிகளைக் கொண்டுவிமானங்களைத் தகர்க்கவும்,

தகர்த்த விமானபாகங்களைக்கொண்டு ராக்கெட்செய்யவும் திட்டமிட்டார்கள்!

அந்த ராக்கெட்டை வீசி என்னைக்கொல்ல சதி செய்தார்கள்!

அவ்வளவுதான்!”

தலை சுற்றி அமர்ந்தார் தன்னாட்சிஅமைப்பின் தலைவர்!

“அதிபரே, நீதிமன்றம் இப்படி ஒருஅபத்தக் கட்டுக்கதையை ஏற்காது.

எல்லோரையும் போல அரசனும்பிக்பாக்கெட் அடித்தார் என்று மட்டும்குற்றச்சாட்டை வைத்தால், அவருக்கும்அவரது கூட்டத்துக்கும் தண்டனைவாங்கித்தருவது சுலபம்!”

“இப்படி ஓர் முட்டாள் கதையைநீதிமன்றம் நம்பாது!”

“யாருக்கு வேண்டும் நீதிமன்றத்தின்நம்பிக்கை?

மக்கள் இதை நம்புகிறார்கள் அல்லவா? அது போதும்!

இதைவிட எத்தனயோ பெரியகதைகளையும் கேள்வியே கேட்காமல்நம்பியவர்கள் அல்லவா?

அவர்கள் என்னைத் தேர்ந்தெடுப்பதுமட்டுமே இலக்கு! அது முடிந்துவிட்டது!”

“வழக்கு?” முணுமுணுப்பாய்க் கேட்டார்தன்னாட்சி அமைப்பின் தலைவர்!

“இனி அரசன் பாடு, உங்கள் பாடு!

இதே கதையைச் சொல்லி வழக்கைஇழுத்தடியுங்கள்!

அரசனுக்கு சாமர்த்தியம் இருந்துதப்பிவிட்டால், அவர் தலைவரோடுகைகோர்த்துக் கொள்வோம்!

அரிதாரக் கும்பலின் தலைமைசரிந்ததிலிருந்து அந்தக் கும்பல்தள்ளாடுகிறது! அது இனி நமக்குவேண்டாச் சுமை!

அடுத்த திருவிழாவுக்குள் அந்தக்கூட்டத்தை வேரோடு அறுத்து, தென்கோடியில் நான் கால் ஊன்ற வழிபாரும்!

முடிந்தால், அதற்காக சிறையில் இருக்கும்அவரது சகாவை கஸ்டடியில் எடுத்துவிசாரியும்!

அந்த அடிமைக்கூட்டத்தை மிரட்டித்தோளில் ஏறி நாம் அடுத்த தேர்தலைசந்திக்கலாம்!”

“அப்போது அரசன் மீதான தங்கள் குற்றச்சாட்டு?”

“அது பழம் கதை! போன திருவிழா சரக்கு!

அடுத்த திருவிழாவுக்காகஅஸ்திரத்தை கூர் தீட்டும்!

பழைய ஆயுதத்தை நீதிமன்றம்பார்த்துக்கொள்ளட்டும்!”

புன்னகைத்து விடை கொடுத்தார்நாகராஜசோழன்!

தலை குனிந்து வெளியேறினார்தன்னாட்சி மன்றத் தலைவர்!

மறுநாள் நடந்ததுதான் ஆரம்ப வரிகள்!

கண் விழித்த ரவி, தனக்குத்தோன்றியதை மளமளவென்று கிறுக்கத்தொடங்கினான்

Comments