குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் - 16 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க 16 மாவட்டங்களில் பரிட்சார்த்த முறையில் சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

அதன்படி. சென்னை, காஞ்சிபுரம், மதுரை, கன்னியாகுமரி உள்பட 16 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள், ஏற்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  எஞ்சிய மாவட்டங்களில் ஏற்கனவே செயல்பட்டு வரும் மகிளா நீதிமன்றங்கள், கூடுதலாக குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது. 

Comments